இந்த நூற்றாண்டின் இணையற்ற துறையாக விளங்கிவரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த சமகால விடயங்களை பகிர்ந்து கொள்ளும் இணையத்தளம்!!
இப்போது கணினி அறிவியலின் பரம்பலானது பட்டணம் முதல் பட்டிக்காடு வரை வியாபித்து படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைத்துத் துறைகளிலும் சகலரையும் ஆட்கொண்டுவிட்டது.
தொழில்வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ளவோ உயர்கல்வியைத் தொடரவோ கணினி அறிவின் தேவையானது மிக மிக முக்கியமானது.
கணினியொன்றை தொட்டே பார்த்திருக்காதவர்கள், கொஞ்சமாக கற்றுக் கொண்டிருப்பவர்கள், கணினி துறையில் பட்டம் பெற்றவர்கள், ஆழமான தொழில்சார் அறிவைக்கொண்டவர்கள், கணினி துறையில் தொழில் தேடுபவர்கள், கணினி அறிவுள்ளவர்களை தமது நிறுவனங்களுக்காக எதிர்பார்த்திருப்பவர்கள் என்று எங்கள் மத்தியில் எவ்வளவு பேர்? நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யமுடியாது? எமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாங்களே பங்களிப்புச் செய்யலாமே ? இந்த சிந்தனைகளின் விளைவே இந்த இணையத்தளத்தின் தோற்றம்.
கால நீட்சியில் இந்த சிறுவிதை பெருவிருட்சமாகி பலன் தரட்டும் !!
Sunday, March 30, 2008
Subscribe to:
Posts (Atom)